வடசென்னை இராயபுரம் மேற்கு மாதா சர்ச் தெருவில்
இருக்கிறது. “நெருப்புக் கோயில்“(ஜல் பிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெகர்) என்னும் ஒரு பார்சி
மதக் கோயில். உலகிலுள்ள 177 ஒற்றை
நெருப்புக் கோயில்களுல் ராயபுரம் நெருப்புக் கோயிலும் ஒன்றாம். இந்தக் கோயில்.
ஃபிரோஜ் எம் கிளப்வாலா மற்றும் சார்தோஸ்டி அஞ்ஞ்சுமான் மூலம் நன்கொடையாகப் பெற்று 1910 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
கோயில் கட்டப்பட்டதிலிருந்து கோயிலில் உள்ள நெருப்பு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே
இருக்கிறது. உலகின் எந்த நாடுகளில் பார்ஸிகள் வசித்தாலும் ஈரானில் இருந்து
கொண்டுவரப்பட்ட நெருப்பின் ஒரு சுடரை தங்களுடன் எடுத்துச் சென்று அதையே
வழிபடுகின்றார்களாம்.
கார்த்திபன்
ஹரிகிருஷ்ணன்
Photography: Karthiban Harikrishnan
Thanks and Courtesy: Books and Online Resources





No comments:
Post a Comment