சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சித்தர்களின் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளன. தங்கள் உடலை துறந்து ஜீவ சமாதி அடைந்த இந்த மகான்கள், இன்றும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த புனித தலங்களின் வழியாக ஒரு ஆன்மீக பயணத்தை மேற்கொள்வோம்.
வியாசர்பாடி பகுதி:
- சிவப்பிரகாச சாமியின் சமாதி: இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் அமைந்துள்ளது
- கரபாத்திர சிவப்பிரகாச சாமியின் சமாதி: முதல் தெரு சாமியார் தோட்டம், அம்பேத்கர் கல்லூரி அருகில். பங்குனி உத்திராட நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை நடைபெறுகிறது.
பெரம்பூர் பகுதி:
- அந்துகுருநாத சுவாமிகள் சமாதி: மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரசன்ன விநாயகர் கோவிலில் பஞ்சமுக வடிவத்துடன் அமைந்துள்ளது
- மதனகோபாலசாமி சமாதி: மேல்பட்டி பொன்னப்பமுதலி தெருவில், ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில்
- சந்திர யோகி சுவாமி சமாதி: மங்களபுரம் ஐந்துலைட் அருகில்
- வேர்க்கடலை சுவாமி சமாதி: அய்யாவு தெரு, திரு.வி.க.நகர்
- மதுரை சாமி சமாதி: செம்பியம் வீனஸ் தியேட்டர் 2வது குறுக்குத் தெரு
- மயிலை நடராஜ சுவாமி சமாதி: கொளத்தூர் பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்
புழல் பகுதி:
கண்ணப்ப சாமியின் ஆசிரமம் புழல் சிறைச்சாலை அருகே காவாங்கரையில் அமைந்துள்ளது. இங்கு சாமிகள் அமர்ந்த கோலத்துடன் ஜீவசமாதி மேடையில் காட்சியளிக்கிறார். அருகில் அவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதியும் உள்ளது.
காரனோடை பகுதி:
- மல்லையா சாமிகள் சமாதி: குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் அமைந்துள்ளது. கருங்கல் சிலையுடன் கூடிய சமாதி கோவில்.
- அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார் சமாதி: கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில், ஆத்தூர் சாலையில். ஆவணி மாதம் முதல் நாளில் வருடாந்திர குருபூஜை.
அலமாதி பகுதி:
- மார்க்கண்டேய மகரிஷி சமாதி: அலமாதீஸ்வரர் கோவிலுக்குள்
- கோவணச்சாமி சமாதி: அலமாதீஸ்வரர் கோவில் அருகில்
பூதூர் பகுதி:
ஷா இன்ஷா பாபா தர்கா: செங்குன்றத்திலிருந்து வடக்கே சோழவரம்-ஓரக்காடு சாலையில் 6 கி.மீ தொலைவில் உள்ள பூதூர் கிராமத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
பஞ்சேஷ்டி பகுதி:
புலேந்திரர் சமாதி (அகத்தியரின் சீடர்): ரெட் ஹில்ஸ்-பொன்னேரி நெடுஞ்சாலையில், ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்தில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில். இங்கு இஷ்டலிங்கேஸ்வரர் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர் பகுதி:
ஐயா சூரியநாத கருவூரார் சமாதி: பதினெண் சித்தர் மடம், 13, குமாரசுவாமி தெரு, வரதராசபுரம். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ஆம் தேதி குருபூஜை விழா நடைபெறுகிறது.
வடதிருமுல்லைவாயில்
அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில்
அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம்
நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
மாசிலாமணி சுவாமிகள்
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி
அமைந்திருக்கிறது.
ஓட்டேரி:
ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில்
சமாதி கோவில்-உருவப்பட பூஜை.
புரசைவாக்கம்:
வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர்
பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.
ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா
தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.
எழும்பூர்:
மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில்
தர்கா.
அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன்
கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை
நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
நுங்கம்பாக்கம்:
கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ
ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.
நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி
மடத்தில் சமாதி கோவில்.
பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில்
ஆஸ்ரமத்தில் சமாதி.
ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம்
ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.
வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம்
எதிரில் அசலத்தம்மன் கோவில்.
கோடம்பாக்கம்:
ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர்
சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.
வடபழனி:
அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில்
உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில்
பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.
திருவொற்றியூர்:
பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில்
வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில்
இவரது பெயருள்ள மடம்
ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க
சாமிகள் மடத்துள் இருக்கிறது.
அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில்
தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.
பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை
அருகில்.
ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.
மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.
முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப்
அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு
பூஜை;
ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி
அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று
வருடாந்திர குருபூஜை!!
ராயபுரம்:
குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம்
பிச்சாண்டி தெருவில் உள்ளது.
ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில்
தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .
மைலாப்பூர்:
திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர்
கோவிலில்.
அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர்
அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.
குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு
பில்டிங்கில் இருக்கிறது.
முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி
அருகில்.
ஆலந்தூர்:
தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி
தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி
கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.
குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.
கிண்டி:
சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு
சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள்
ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத
பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள
சாய்பாபா கோவில் வளாகத்தில்.
திருவான்மியூர்:
பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள்
ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.
வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,
வேளச்சேரி:
சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின்
ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.
ராஜகீழ்ப்பாக்கம்:
சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த
சபையின் சமாதி.
பெருங்குடி:
நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார்
சாலை அம்மன் கோவிலுகுள்.
நங்கநல்லூர்:
மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி
அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி
சிட்லப்பாக்கம்:
சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம்
பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.
தாம்பரம்:
எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில்
இவரது சமாதி கோவில் இருக்கிறது.
படப்பை:
துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம்
சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.
பூந்தமல்லி
கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில்
உள்ளார்.
பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில்
ஜீவசமாதி இருக்கிறது.
கருடகோடி சித்தர்
பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர்:
அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில்
ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.
வெள்ளறை கிராமம்
ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.
மாங்காடு :
சர்வசர்ப்ப சித்தர்
மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில்
கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.
புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)
மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி
மற்றும் 18 சித்தர்
திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.
கோவளம்
ஆளவந்தார் சாமி
கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும்
நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.
திருக்கழுகுன்றம் :
குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12
கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே
ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.
அப்பூர்=பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்
பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி
இருக்கிறது.
திருப்போரூர் :
சிதம்பரச்சாமி
திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே
சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில்
சிவலிங்கப்பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை
விழா நடைபெற்றுவருகிறது.
செம்பாக்கம் :
இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம்
ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள்
உள்ளன.
கூடுவாஞ்சேரி :
மலையாள சாமி
கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம்
ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி
இருக்கிறது.
அச்சரப்பாக்கம் :
முத்துசாமி சித்தர்
அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில்
நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே
சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த புனித தலங்கள் அனைத்தும் பக்தர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், மன அமைதிக்கும் வழிகாட்டுகின்றன.