Saturday, May 29, 2021

 அன்பு நண்பர்களே,

பேச்சு ஆங்கிலத்தை ( Spoken English ) வளர்த்துக் கொள்வதற்கான எளிய குறிப்புகளை வழங்கிறது கீழ்கண்ட பதிவு.

மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்


நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்களை அளிக்கும் இணையத்தளம் - Names for Kids

அன்பு நண்பர்களே, 


கீழ்கண்ட இணையத்தளம் நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்களை அளிக்கிறது. பயன்படுத்தி, பயன் பெறுங்கள்


நல்ல, தூய தமிழ்க் குழந்தைப் பெயர்களை அளிக்கும் இணையத்தளம் - Names for Kids


Monday, May 24, 2021

Inauguration of Best YouTube Channel Master K _ Master K “ யூடியூப் சேனல்_Best YouTube Channel in Tamil



 “நமது யூடியூப் சேனல் (Master K)”


மகள் துவக்கி வைக்க, இலக்கை நோக்கி நமது யூடியூப் சேனல் (Master K)
பாருங்கள்! பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! மாஸ்டர் ஆகுங்கள்!
அரிய தகவல்கள், சுயமுன்னேற்ற யுக்திகள், புதிய தொழில்நுட்ப கற்றல்கள், மேலும் பல பயனுள்ள, சுவாரசிய செய்திகளும், நான் கற்ற தகவல் தொழில்நுட்பங்களும் இந்த தளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும்.

நீங்களும் உங்களைப்பற்றி, நீங்கள் அறிந்த அரிய, பகிர விரும்பும், தகவல்களை பகிர்ந்தால் நமது யூடியூப் சேனல் (Master K)-ல் பகிரப்படும்.

அரிய மனிதர்கள், அவர்களின் தகவல்கள், மற்றும் பயனுள்ள தகவல்களை ஓர் இடத்தில் ஆவணம் செய்வோம்!

நமது யூடியூப் சேனல் (Master K) – வை பாருங்கள்! பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! மாஸ்டர் ஆகுங்கள்!
நன்றி!
வாழ்த்துகள்
.


அன்புடன்,
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்

#Master K Best YouTube Channel, #Master K Best YouTube Channel in Tamil, #Master K Best YouTube Channel for unique information, #Master K Best YouTube Channel for motivation.



எழுத்தாளர் கி. ரா (கி. ராஜநாராயணன்) அய்யா அவர்களுக்கு புகழஞ்சலி.

 எனது வாழ்வின் அரிய நிகழ்வு. கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி கலை விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் #Indran Rajendran அய்யா அவர்கள் என்னையும் மற்றும் சில நண்பர்களையும் கரிசல் இலக்கியத்தின் தந்தை, தமிழின் ஆகச்சிறந்த கதைச் சொல்லி எழுத்தாளர் கி. ரா (கி. ராஜநாராயணன்) அய்யா அவர்களை சந்திக்க அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.


இந்திரன் அய்யாவை தெளிவாக அடையாளம் கண்டு கொண்ட கி.ரா அய்யா “இந்திரன் வாருங்கள்” என்று அழைத்தார். நாங்கள் எங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் முன்னபாகவே அவர் எங்கள் ஒவ்வொருவரின் பெயரையும், பணிகளையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டார்.

ஏற்கனவே பழகிய நண்பர்களோடு பழகுவதைப்போல மிக இயல்பாக அனைவரிடமும் பேசினார். பேச்சின் இடை இடையே புன்னகத்துக் கொண்டே இருந்தார். அவருக்கு 98 வயது என்பதை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை சொற்களிலும், நினைவாற்றலிலும் அத்தனை தெளிவு.

இந்திரனின் அய்யாவின் “உலகிலேயே சிறந்த புத்தகத்தை வெளியிட புத்தகத்த பெற்ற அவர் அப் புத்தகத்தின் கவரை பிரித்தார் அது மிக கடினமாக இருந்தது அதை எங்களிடம் கொடுத்து பிரிக்க சொன்னார் எங்களுக்கும் அந்த கவரைப் பிரிப்பது கடினமாகவே இருந்தது.

படுக்கையில் சாய்ந்து படுத்தபடியே புத்தகத்தை வெளியிட்டார். அந்நூலில் ”உலகிலேயே சிறந்த புத்தகம் இதுவரை எழுதப்படாத புத்தகம்தான் “என்று இந்திரன் அய்யா சொன்னவுடன் ரசித்து சிரித்தார். நகைச்சுவை உணர்வுடன் உடனே தன் பக்கத்தில் படுக்கையில் வைத்திருந்த எழுதப்படாத ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து எங்களிடம் கொடுத்து விட்டுச் சொன்னார் “ இது நான் நேற்று எழுதி முடித்த புத்தகம்” என்று சொல்லி சிரித்தார்.

பிறகு மற்றுமொறு நோட்டு புத்தகத்தை காண்பித்தார் அந்த நோட்டு புத்தகத்தில் “கணபதி” என்றோ அல்லது "கணபதியம் என்றோ என்று தலைப்பு கொட்டை எழுத்துகளால் அவரின் அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டு கீழே சில வரிகள் எழுதப்பட்டு இருந்தன. “கணபதி” என்பது அவரின் மனைவியின் இயற்பெயர் அல்லது அவர் வீட்டார் அழைக்கும் பெயர் என்று நினைக்கிறேன். அவரின் மனைவி குறித்த அவர் எழுத ஆரம்பித்த புத்தகம் அது என்று யூகிக்கிறேன்.

கி. ரா (கி. ராஜநாராயணன்) அய்யா மற்றும் Indran Rajendran அய்யா ஆகியோருக்கு இடையில் ஒரு அற்புத உரையாடல் நடந்ததுக் கொண்டிருந்தது. சளைப்பில்லாமல் ஒருவருக்கொருவர் கதைகளையும், அதன் நுணுக்கங்கள் குறித்தும் பேசிக்கொண்டே இருந்தார்கள். நாங்கள் அந்த கதைகளின் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தோம்.


அருள் வந்த எங்கள் ஊர்க்கார அருளார்களைப் போல அவர்களிடமிருந்து கதைகள் ஊற்றெடுத்துக் கொண்டே இருந்தன.









எழுத்தாளர் கி. ரா (கி. ராஜநாராயணன்) இயற்கை எய்தினார்.

 சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் இலக்கியத்தின் தந்தை, தமிழின் ஆகச்சிறந்த கதைச் சொல்லி எழுத்தாளர் கி. ரா (கி. ராஜநாராயணன்) அய்யா அவர்கள் மூப்பின் காரணமாக திங்கட்கிழமை இரவு இயற்கை எய்தினார்.


1958-ல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

அய்யா கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி."நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்" என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்வார். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகும் அளவிற்கு தானே ஒரு புத்தகம் ஆனார்.

அய்யா அவர்களுக்கு புகழஞ்சலி. உங்கள் எழுத்துக்களில் என்றென்றும் வாழ்கின்றீர்கள்.









Wednesday, May 12, 2021

யூனிட்டி ஹவுஸ்” சென்னை, பெரம்பூர் - “Unity House” Chennai, Perambur.

சென்னை, பெரம்பூர், சிறுவள்ளூர் சாலையில் அமைந்திருக்கிறது “யூனிட்டி ஹவுஸ்” ( தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் - Southern Railway Employees’ Sangh).

தெற்கு ரயில்வே ஊழியர்களின் சங்கத்தின் இரண்டாவது வருடாந்திர மாநாடு 1927-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது அந்த மாநாட்டில் ஸ்ரீ எஸ். சீனிவாச ஐயங்கார் தலைமை பதவிக்கும், ஸ்ரீ டி. கோலந்தாயுடன் யூனியன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். யூனியன் அலுவலகத்திற்கு சொந்தமாக ஒரு கட்டிடம் வைத்திருப்பது அவசியமாக இருந்ததது அவர்களுக்கு.

தேசத்தந்தை மகாத்மா காந்தி 3-9-1927 அன்று மெட்ராஸுக்கு வந்தபோது, அவர் யூனியன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட அழைக்கப்பட்டார். சி எஃப் ஆண்ட்ரூஸ், கே காமராஜ், கஸ்தூரிபாய் காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள். பெரம்பூர் தொழிலாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது. திருமதி. கஸ்தூரிபாய் காந்தி முதல் செங்கல்லை எடுத்து மகாத்மா காந்தியிடம் கொடுக்க அவர் அடிக்கல் நாட்டினார். யூனிட்டி ஹவுஸ்-ன் கட்டிட அமைப்பு காலனித்துவ பாணியை நெருக்கமாக ஒத்திருக்கிறது.
ஆச்சார்யா வினோபா பாவே, பி. ஆர். அம்பேத்கர், சி. சுப்பிரமணியன், ஆர்.வெங்கடராமன் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரன் ஆகிய பல பிரபல தலைவர்கள் இங்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.
#யூனிட்டி ஹவுஸ், #Unity House, #சென்னை, பெரம்பூர், #Chennai, #Perambur#சென்னை வரலாறு, #Historical Buildings, # Monuments in Chennai,#Karthiban Harikrishnan






Saturday, May 8, 2021

திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க) Dravida Munnetra Kazhagam (DMK)

தி.முக. தொடக்கம்


1949-ஆம் ஆண்டு,செப்டம்பர் 18-ம் நாள், சென்னை, ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது, திமுகவின் தொடக்க விழாவுக்கு லட்சோபலட்ச தொண்டர்கள் கூடினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளராக அண்ணா (கா. ந. அண்ணாதுரை) தேர்ந்தெடுக்கபட்டார். கலைஞர் அவர்கள் கழகத்தின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

திமுக-கொடி, சின்னம்

நீண்ட சதுர வடிவத்தில் மேல் சரிபாதி கருப்பு நிறமாகவும், கீழ் சரிபாதி சிவப்பு நிறமாகவும் அமைந்துள்ளது.

கருப்பு: அரசியல் பொருளாதார சமுதாய வாழ்விலுள்ள இருண்ட நிலையை உணர்த்தி நிற்கும் அறிகுறியாகும்.

சிவப்பு: அம்மூன்று துறையிலும் உள்ள இருண்ட நிலையைப் போக்கி ஒளி நிலையை உண்டாக்க வேண்டும் என்பதைக் காட்டும் அறிகுறியாகும், இருண்ட நிலையையை அழித்துக் கொண்டு வரவேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமாக 'உதயசூரியன்' தேர்ந்தெடுக்கப்பட்டது. 2.3.1958 அன்று தேர்தல் ஆணையம் இதற்கான அங்கீகாரத்தை கொடுத்தது.