Showing posts with label Historical Buildings in Chennai. Show all posts
Showing posts with label Historical Buildings in Chennai. Show all posts

Tuesday, October 29, 2024

"வட சென்னை கல்வி வளர்ச்சி: Chevalier T. Thomas Elizabeth College-ல் Dr. எச். கார்த்திபன் உரை

 சென்னை பெரம்பூரில் உள்ள செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி (Chevalier T Thomas Elizabeth College For Women)"வட சென்னை: கல்வி வரலாறும் வளர்ச்சியும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கினை 25.10.2024 அன்று நடத்தியது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினேன்




Sunday, September 1, 2024

பழைய - குடிமைக் கடனாளிகளின் சிறை (OLD – CIVIL DEBTOR'S JAIL) – வடசென்னை

டசென்னைப் பகுதியில் கடனாளிகளை அடைத்து வைக்கும் ஒரு சிறை இருந்தது? உங்களுக்குத் தெரியுமா?

பழமையான வடசென்னைப் பகுதியில், நம்மில் பலருக்குத் தெரியாத ஒரு வரலாற்றுச் சின்னம் உள்ளது. அது தான் பழைய கடனாளிகள் சிறை (OLD – CIVIL DEBTOR'S JAIL). இந்த அரிய கட்டிடத்தின் கதை பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதன் சுவாரசியமான வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.

1692-ல் கட்டப்பட்ட இந்தச் சிறை, கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாதவர்களை அடைக்கும் இடமாக இருந்துள்ளது. அக்காலத்தில் கடன் வாங்குவது ஒரு பெரும் ஆபத்தான செயல் என்பதை இது காட்டுகிறது.

1793-ல் இந்த வளாகம் விரிவடைந்து, இன்று நாம் அனைவரும் அறியும் பாரதி மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின், இந்தக் கட்டிடம் பல மாற்றங்களை அடைந்துள்ளது. முதலில் குடிசைத் தொழில் பயிற்சி மையமாகவும், பின்னர் மத்திய பாலிடெக்னிக் நிறுவனமாகவும் மாறியுள்ளது. 1964-ல் இது கலைக் கல்லூரியாக மாறி, இன்று பாரதி மகளிர் கல்லூரி என அழைக்கப்படுகிறது.

கல்லூரி வளாகத்தில் நிற்கும் சிதைந்த கட்டிடம், அதன் பழைய நாட்களின் நினைவூட்டலாக உள்ளது. உயர்ந்த கோட்டைச் சுவர்களுக்குள் அமைந்த நீண்ட கட்டிடம், அதன் தெற்குப் பக்கத்தில் உள்ள உயர்ந்த நுழைவாயில், படிக்கட்டுகள் - இவை அனைத்தும் அதன் முந்தைய பயன்பாட்டைக் காட்டுகின்றன.

சௌல்ட்ரி நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். கடுமையான குற்றவாளிகளுக்கான இருண்ட அறை, ஒரே ஒரு கழிவறை - இவை அனைத்தும் அந்தக் காலத்தின் கடுமையான சிறைச் சூழலை நமக்கு உணர்த்துகின்றன.

சுவாரசியமாக, 1964 முதல் 2004 வரை இதே அறைகள் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பறைகளாகப் பயன்பட்டுள்ளன. ஒரு காலத்தில் கைதிகளை அடைத்து வைத்த இடம், பின்னர் அறிவைப் பரப்பும் இடமாக மாறியுள்ளது!

இன்றும் வடசென்னை மின்ட் பேருந்து நிலையத்தில் இருந்து பாரதி மகளிர் கல்லூரி வரை செல்லும் சாலை "பழைய சிறைச்சாலை சாலை" என்று பெயர்ப் பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 நண்பர்களே!

பழைய - குடிமைக் கடனாளிகளின் சிறை (OLD – CIVIL DEBTOR'S JAIL) குறித்து நீங்கள் அறிந்த சுவாரசியமான தகவல்களைப் பகிருங்கள்.

Dr. எச். கார்த்திபன்


#வடசென்னை #NorthChennai #கருப்புநகரம் #BlackTown #ஜார்ஜ்டவுன் #GeorgeTown #வரலாற்றுச்சின்னம் #HistoricalMonument #நினைவுச்சின்னங்கள் #Monuments #பாரதிமகளிர்கல்லூரி #BharathiWomensCollege #சென்னைவரலாறு #ChennaiHistory #பழையசிறை #OldJail #CivilDebtorsJail #HeritageBuilding #ChennaiHeritage #DiscoverChennai #சென்னைவரலாற்றுஇடம் #ChennaiHistoricalPlace #பிரிட்டிஷ்காலனித்துவம் #BritishColonialism #கருப்புநகரத்தில்பிரிட்டிஷ்ஆட்சி #BritishRuleInBlackTown #தமிழ்நாடுவரலாறு #TamilNaduHistory #இந்தியவரலாறு #IndianHistory #பாரம்பரியபாதுகாப்பு #HeritageConservation

Sunday, July 4, 2021

சென்னையின் பழமையான கோழி மார்கெட் | மஸ்கான்சாவடி சந்தை | Chennai Pet Market

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

சென்னையில் நூற்றாண்டுகள் பழமையான கோழி மார்கெட் என்கிற மஸ்கான்சாவடி Chennai Pet Market குறித்த சுவாரசிய வரலாற்றுத் தகவல்களை அறிந்துக் கொள்ளுங்கள். 

அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்



 


#Master K,#Master KH,#Karthiban H,#MaskhanChavadi,Chennai,#Kozhi Market,Chennai,#Chennai History,#North Madras History, #North Madras Lifesstyle,#oldest Market in Chennai,#oldest Pet Market in Chennai,#Chennai Sunday Market,#Mannady Pet Market,#Broadway Pet Market,#Pet Market in Chennai,#Vetinary Market in Chennai,#Places to visit in Chennai,#Specialties of Chennai,#British Chicken Market in Chennai,#Entertainment of British Period Officers,Amman Koil Street in Chennai,#வட சென்னை வரலாறு,#சென்னையின் நினைவுச்சின்னங்கள்,#சென்னையின் பழமையான மார்கெட்,#கோழி மார்கெட்,#மஸ்கான்சாவடி சந்தை, #சென்னை கோழி சந்தை, #புறா பந்தயம், #புறா வளர்ப்பு, #கோழிச் சண்டை, #சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள், #சென்னையின் சிறப்புகள், #சென்னையின் பிரிட்டிஸ் கால கோழி மார்கெட், #பிரிட்டிஸ் கால அலுவலர்களின் பொழுதுப்போக்கு, #வடசென்னை வாழ்வியல், சென்னை அம்மன் கோவில் தெரு

Sunday, June 6, 2021

சென்னை வியாசர்பாடியில் வள்ளலார் இராமலிங்க சுவாமி திருவடியை வலம் வந்து பாம்பு புண்ணியம் பெற்ற கோயில்

சென்னை வியாசர்பாடியில் 1834-ஆம் ஆண்டு திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தனது பணிரெண்டாம் வயதில் சன்மார்க்க பிரச்சாரம் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பாம்பு அவரின் திருவடியை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது. இந்த இடத்தில், இந்த நிகழ்வின் நினைவாக அமைந்துள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் வரலாறு குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். 

அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


 

#Chennai History, #North Madras History, #Historical buildings in Chennai, #Monuments in Chennai, # Temples in Chennai, #Ramalinga Swamy Temple, #Ramalinga Vallalar Temple, Vysarpadi, , #Ramalinga Vallalar Temple, #Vysarpadi, Chennai, #Chennai Basin Bridge Vallalar Temple,  #Timeline of Chennai history, #Vallalar Ramalingaswamigal, #Sathya Gnana Sabha, #Vallalar in Chennai, #Vallalar Nagar, Chennai, #Arutprakasa Vallalar, #Chidambaram Ramalingam, #Ramalinga Swamigal, #Vallalar, #Ramalinga Adigal, #Gnana Siddhars, #Ramalinga Swamigal, #19th-century Hindu religious Leaders, #Spiritual Teachers, #Tamil Poets

#சென்னை வரலாறு, #வடசென்னை வரலாறு, #சென்னையில் உள்ள வரலாற்று கட்டிடங்கள், #சென்னையில் உள்ள நினைவுச்சின்னங்கள், #சென்னையில் உள்ள கோயில்கள், #ராமலிங்க சுவாமி கோயில், #இராமலிங்க சுவாமி கோயில்,  #ராமலிங்க வல்லலார் கோயில், வியாசர்பாடி, # ராமலிங்க வள்ளலார் கோயில், # சென்னை, சென்னை பேசின் பாலம் வள்ளலார் கோயில், #சென்னை வரலாறு காலவரிசை,          # வள்ளலார் ராமலிங்க சுவமிகள், #சத்திய ஞான சபை, #சென்னையில் வள்ளலார்,            # வள்ளலார் நகர், சென்னை, # அருட்பிரகாச வள்ளலார், # சிதம்பரம் ராமலிங்கம், # இராமலிங்கம், # ராமலிங்கம் ஞான சித்தர்கள், # 19 ஆம் நூற்றாண்டு இந்து மதத் தலைவர்கள், # சமய ஆசிரியர்கள், # தமிழ் கவிஞர்கள்



Friday, June 4, 2021

வாலாஜா மசூதி - வாலாஜா பெரிய மசூதி - Triplicane Big Mosque, Wallajah Mos...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாலாஜா மசூதி (வாலாஜா பெரிய மசூதி - Wallajah Mosque, Triplicane Big Mosque) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இம் மசூதி இரும்பு அல்லது மரத்தைப் பயன்படுத்தாமல் முழு அமைப்பும் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இம்மசூதியின் பெரும்பாலான நிர்வாக ஊழியர்கள் இந்துக்கள். வரலாற்று சிறப்பு மிக்க பழமையான பாரம்பரிய மிக்க மசூதி குறித்த அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள்.

      

அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 

அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்

தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர் - Our Lady of Lourdes Shrines. Pe...

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 

சென்னை, பெரம்பூர் பகுதியில் தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத வகையில், கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்கு கொண்ட ஆலயமாக கட்டப்பட்டுள்ள பழமையான வரலாற்று சிறப்பு வாய்ந்த "தூய லூர்து அன்னை திருத்தலம்" – “Our Lady of Lourdes Shrines” குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்க்-கை "கிளிக்" செய்யுங்கள். 

அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்


 

Wednesday, June 2, 2021

Unity House - யூனிட்டி ஹவுஸ் சென்னையில் மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டிய பழமையான வரலாற்று கட்டிடம்

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், 


Unity House - யூனிட்டி ஹவுஸ்  சென்னையில் மகாத்மா காந்தி அடிக்கல் நாட்டிய பழமையான வரலாற்று கட்டிடம் குறித்து அறிந்துக் கொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.


   


அரிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துக் கொள்ள நமது Master K சேனலை தொடர்ந்து பாருங்கள்! நண்பர்களுக்கு பகிருங்கள்! சப்ஸ்கிரைப் செய்யுங்கள்! நீங்களும் மாஸ்டர் ஆகுங்கள்! 


அன்புடன், 
கார்த்திபன் ஹரிகிருஷ்ணன்

Wednesday, May 12, 2021

யூனிட்டி ஹவுஸ்” சென்னை, பெரம்பூர் - “Unity House” Chennai, Perambur.

சென்னை, பெரம்பூர், சிறுவள்ளூர் சாலையில் அமைந்திருக்கிறது “யூனிட்டி ஹவுஸ்” ( தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் - Southern Railway Employees’ Sangh).

தெற்கு ரயில்வே ஊழியர்களின் சங்கத்தின் இரண்டாவது வருடாந்திர மாநாடு 1927-ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது அந்த மாநாட்டில் ஸ்ரீ எஸ். சீனிவாச ஐயங்கார் தலைமை பதவிக்கும், ஸ்ரீ டி. கோலந்தாயுடன் யூனியன் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். யூனியன் அலுவலகத்திற்கு சொந்தமாக ஒரு கட்டிடம் வைத்திருப்பது அவசியமாக இருந்ததது அவர்களுக்கு.

தேசத்தந்தை மகாத்மா காந்தி 3-9-1927 அன்று மெட்ராஸுக்கு வந்தபோது, அவர் யூனியன் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட அழைக்கப்பட்டார். சி எஃப் ஆண்ட்ரூஸ், கே காமராஜ், கஸ்தூரிபாய் காந்தி மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள். பெரம்பூர் தொழிலாளர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான நாளாக இருந்தது. திருமதி. கஸ்தூரிபாய் காந்தி முதல் செங்கல்லை எடுத்து மகாத்மா காந்தியிடம் கொடுக்க அவர் அடிக்கல் நாட்டினார். யூனிட்டி ஹவுஸ்-ன் கட்டிட அமைப்பு காலனித்துவ பாணியை நெருக்கமாக ஒத்திருக்கிறது.
ஆச்சார்யா வினோபா பாவே, பி. ஆர். அம்பேத்கர், சி. சுப்பிரமணியன், ஆர்.வெங்கடராமன் மற்றும் எம். ஜி. ராமச்சந்திரன் ஆகிய பல பிரபல தலைவர்கள் இங்கு வந்துள்ளதாக கூறுகிறார்கள்.
#யூனிட்டி ஹவுஸ், #Unity House, #சென்னை, பெரம்பூர், #Chennai, #Perambur#சென்னை வரலாறு, #Historical Buildings, # Monuments in Chennai,#Karthiban Harikrishnan