Friday, November 20, 2015

Thursday, October 1, 2015

அறுபத்து நான்கு ஆயகலைகள்

"மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்"

"அந்த அறுபத்துநான்கு கலைகளின் பட்டியலை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 குறிப்பிடப்பட்டுள்ளவை இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
`காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.

இலக்கம் கலை தமிழ் விளக்கம்
1. அக்கர இலக்கணம் எழுத்திலக்கணம்
2. லிகிதம் (இலிகிதம்) எழுத்தாற்றல்
3. கணிதம் கணிதவியல்
4. வேதம் மறை நூல்
5. புராணம் தொன்மம்
6. வியாகரணம் இலக்கணவியல்
7. நீதி சாஸ்திரம் நய நூல்
8. சோதிடம் கணியக் கலை
9. தரும சாஸ்திரம் அறத்து பால்
10. யோகம் ஓகக் கலை
11. மந்திரம் மந்திரக் கலை
12. சகுனம் நிமித்தக் கலை
13. சிற்பம் கம்மியக் கலை
14. வைத்தியம் மருத்துவக் கலை
15. உருவ சாஸ்திரம் உருப்பமைவு
16. இதிகாசம் மறவனப்பு
17. காவியம் வனப்பு
18. அலங்காரம் அணி இயல்
19. மதுர பாடனம் இனிது மொழிதல்
20. நாடகம் நாடகக் கலை
21. நிருத்தம் ஆடற் கலை
22. சத்த பிரமம் ஒலிநுட்ப அறிவு
23. வீணை யாழ் இயல்
24. வேனு குழலிசை
25. மிருதங்கம் மத்தள நூல்
26. தாளம் தாள இயல்
27. அகத்திர பரீட்சை வில்லாற்றல்
28. கனக பரீட்சை பொன் நோட்டம்
29. இரத பரீட்சை தேர் பயிற்சி
30. கஜ பரீட்சை யானையேற்றம்
31. அசுவ பரீட்சை குதிரையேற்றம்
32. இரத்தின பரீட்சை மணி நோட்டம்
33. பூ பரீட்சை மண்ணியல்
34. சங்கிராம இலக்கணம் போர்ப் பயிற்சி
35. மல்யுத்தம் கைகலப்பு
36. ஆகர்ஷணம் கவிர்ச்சியல்
37. உச்சாடணம் ஓட்டுகை
38. வித்து வேஷணம் நட்பு பிரிக்கை
39. மதன சாஸ்திரம் மயக்குக் கலை
40. மோகனம் புணருங் கலை (காம சாத்திரம்)
41. வசீகரணம் வசியக் கலை
42. இரசவாதம் இதளியக் கலை
43. காந்தர்வ விவாதம் இன்னிசைப் பயிற்சி
44. பைபீல வாதம் பிறவுயிர் மொழி
45. தாது வாதம் நாடிப் பயிற்சி
46. கெளுத்துக வாதம் மகிழுறுத்தம்
47. காருடம் கலுழம்
48. நட்டம் இழப்பறிகை
49. முட்டி மறைத்ததையறிதல்
50. ஆகாய பிரவேசம் வான்புகுதல்
51. ஆகாய கமனம் வான் செல்கை
52. பரகாயப் பிரவேசம் கூடுவிட்டு கூடுபாய்தல்
53. அதிரிச்யம் தன்னுறு கரத்தல்
54. இந்திர ஜாலம் மாயம்
55. மகேந்திர ஜாலம் பெருமாயம்
56. அக்னி ஸ்தம்பம் அழற் கட்டு
57. ஜல ஸ்தம்பம் நீர்க் கட்டு
58. வாயு ஸ்தம்பம் வளிக் கட்டு
59. திட்டி ஸ்தம்பம் கண் கட்டு
60. வாக்கு ஸ்தம்பம் நாவுக் கட்டு
61. சுக்கில ஸ்தம்பம் விந்துக் கட்டு
62. கன்ன ஸ்தம்பம் புதையற் கட்டு
63. கட்க ஸ்தம்பம் வாட் கட்டு
64. அவத்தை பிரயோகம் சூனியம்

வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;https://www.blogger.com/blogger.g?blogID=8896314825939426678#editor/target=post;postID=22539892347031547
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.)."

Thanks & courtesy:https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81

Biography - J. Krishnamurti Online



Thanks and Courtesy: Online resources

Theosophist Annie Besant's 168th birthday_Theosophy UK Annie Besant Story.wmv ANNIE BESANT (1847-1933)_Biography








Friday, September 11, 2015

Kavithai in websites



 http://rajiyinkanavugal.blogspot.in/search/label/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D

https://namtamilkavithaigal.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/

http://eluthu.com/kavithai/237211.html

http://eluthu.com/kavithai/236631.html



Thursday, September 3, 2015

The man with 2000 cameras and counting

In Bengaluru, the gramophone still plays on

Dear Friends, 

I came to an interesting  information an old Gramophone shop which located at Bengaluru. Kindly to through below link to know more interesting information. 






Thanks and Courtesy: Books and Online Resources

Thankappan Achari - Thiruvananthapuram - The Hindu

Hi Friends,

Below article explains about an interesting person Mr. Thankappan Achari who repairs Gramophones. 



Thanks and Courtesy: Books and Online Resources

How expats find their voice - The Hindu - Enlish learning

யோகமும் மனித மாண்பும் அறிமுகம் நடிகர் திரு. சந்தானம் அவர்கள். நாள் : 14.07.2012 இடம் : மஞ்சக்குப்பம் - மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, கடலூர்.



Thanks and Courtesy: YouTube and Online resources

Tuesday, August 25, 2015

Online dictionaries

AutoCAD Tutorials

Free Mathematics Tutorials Free Mathematics Tutorials

Learn English Online

STUDY MATERIAL FOR GATE,GRE, CIVIL SERVICES

Learn English

Freevideo Lectures - Free College Courses with Video Tutorials

MIT OPEN COURSEWARE

Wednesday, August 12, 2015

Effective-People : வெற்றி பழக்கங்கள் 7..! - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

Effective-People : வெற்றி பழக்கங்கள் 7..! - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

வெற்றியாளர்களின் வெற்றி பார்முலா..! - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

வெற்றியாளர்களின் வெற்றி பார்முலா..! - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

வெற்றிக்கு வழிகாட்டும் அவசியமான 5 ஓய்வு நேரப் பழக்கங்கள்.. - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

வெற்றிக்கு வழிகாட்டும் அவசியமான 5 ஓய்வு நேரப் பழக்கங்கள்.. - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

வேலையில் மனபூர்வமாக திருப்தி அடைய வழி ஸ்டீவ் ஜாப்ஸ் - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

வேலையில் மனபூர்வமாக திருப்தி அடைய வழி ஸ்டீவ் ஜாப்ஸ் - செல்வத்தின் முகவரி - நிதி முதலீடு Insurance, Real Estate, Share Market, Mutual Fund, Bank

Nithi Muthaleedu - Online Magazine

The Bodleian treasures online – in pictures

தேசிய நூலகர் தினம் - ஆகஸ்ட் 12

"இந்திய நூலகத் தந்தை' என போற்றப்படும் டாக்டர். எஸ்.ஆர். ரங்கநாதன் பிறந்த தினமே தேசிய நூலகர் தினமாக (National Librarians Day) கொண்டாடப்படுகிறது.
 
தமிழக அரசின் பொது நூலகத் துறை மற்றும் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நூலகர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
 
நூலகத்துக்கு சென்று படிக்கும் பழக்கத்தை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வு தினமாக இது அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நூலகங்களில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
 
எஸ்.ஆர். ரங்கநாதன் வாழ்க்கை வரலாறு:
 
சீர்காழி அருகே உள்ள வேதாந்தபுரம் கிராமத்தில் பிறந்தவர் திரு. எஸ்.ஆர். ரங்கநாதன். நூலகத் துறைக்கு ஆற்றியுள்ள சிறப்புமிக்க பங்களிப்புக்காக அவருடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 12- ஆம் தேதியை தேசிய நூலகர் தினமாக மத்திய அரசு அறிவித்தது.
 
1892 ஆகஸ்ட் 12 ஆம் தேதி ராமாமிர்த்த ஐயருக்கும் சீதாலட்சுமி அம்மையாருக்கும் புதல்வராக ரங்கநாதன்  பிறந்தார். 1921 ஆம் ஆண்டு கணிதத் துறை உதவிப் பேராசிரியராகச் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியைத் தொடங்கினார், திரு. ரங்கநாதன்.
 
1924 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நூலகரானார். இவரே, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகர். நூலகத் துறைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இங்கிலாந்து சென்று நூலக அறிவியலில் பயிற்சி பெற்றார்.
 
கோலன் பகுப்பு முறை..!
 
புத்தகங்களைப் பொருள் (அர்த்தம்) வாரியாகப் பிரித்து அடுக்குவதற்காகக் "கோலன் பகுப்பு முறை' என்னும் பகுப்பு முறையைக் கண்டுபிடித்தார், திரு. ரங்கநாதன். இவர் ஆராய்ந்து கண்டுபிடித்த இந்த முறை, நூலகத் துறையைச் சார்ந்த பல மேனாட்டு அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதுவரை கையாளப்பட்டுவந்த பகுப்பு முறையைக் காட்டிலும் கோலன் பகுப்பு முறை எளிமையாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருந்ததால் பல நாட்டு நூலகங்களில் இம்முறையிலேயே நூல்கள் பிரித்து வைக்கப்பட்டன. .
 
கோலன் பகுப்பு முறை பல்வேறு வகைப்பட்ட பொருள்களில் எழுதப்பட்ட நூல்களைப் பிரித்து, நூலகத்தில் அந்தந்தப் பொருளுக்குரிய நூல்களை அந்தந்த இடத்தில் வைக்க வசதியாக இருந்தது. இந்தப் பகுப்பு முறை நூலகத்துக்கு வரும் வாசகர்கள் தாங்கள் விரும்பும் நூல்களை எளிதில் எடுத்துப் படிக்கவும், படித்து முடித்த பின் அந்தந்த நூலுக்குரிய இடத்தில் நூலகர் அடுக்கி வைக்கவும், நூற்றொகை தயாரிக்கவும் உதவியாக இருந்தது.
 
நூலகர் திரு. எஸ்.ஆர். ரங்கநாதனின் கண்டுபிடிப்பான கோலன் பகுப்பு முறையில் நூலகப் பொருள் பட்டியல் தயாரிப்பதும், அதனை நூலகர்களும், வாசகர்களும் பயன்படுத்துவதும் எளிதாக இருந்தது. தமிழக அரசின் பொது நூலகத் துறை நூலகங்களில் இப்பகுப்பு முறையில்தான் நூல்கள் பொருள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
 
இந்தியாவின் இதர பகுதிகள், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நூலகங்கள் இந்தக் கோலன் பகுப்பு முறையைத்தான் இன்றும் பயன்படுத்துகின்றன.
 
நூலக மாதிரி சட்டம்..!
 
நூலக அறிவியல் பற்றி பல நூல்களை எழுதியதோடு, பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். 1939 ஆம் ஆண்டு நூலக மாதிரி சட்டத்தை இயற்றினார்.  1948 ஆம் ஆண்டில் இவருடைய முயற்சியால்தான் சென்னை பொது நூலகச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி உள்ளாட்சி நிறுவனங்கள் வசூல் செய்யும் சொத்து வரியில் (பிராபர்ட்டி டேக்ஸ்) 10 சதவிகிதம் நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது.
 
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நூலகராகவும், டெல்லி நூலகத் துறையின் தலைவராகவும் பணியாற்றிய திரு. ரங்கநாதன், ரஷியா, கிழக்கு ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் சென்று நூலகம் தொடர்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
 
புதுடெல்லியில் உள்ள நூலகத் தரக் குழுவின் தலைவராகவும் இருந்தார். நூலக அறிவியல் தொடர்பான இதழின் பதிப்பாசிரியராகவும், டி.ஆர்.டி.சி. நூலக ஆராய்ச்சியின் சிறப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்."
 
Source : http://www.nithimuthaleedu.com/2012/08/12.html#.VcrDHk8VhLM