Friday, August 25, 2023

இராமலிங்க சாமி கோயில் என்கிற திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை - டாக்டர் எச்.கார்த்திபன்

 திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1834-ஆம் ஆண்டு தன் பணிரெண்டாம் வயதில் பல மத சயத்தாரோடு சுத்த சன்மார்க்கப் பிரச்சாரம் வியாசர்பாடியில் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பெரிய சர்ப்பம் வேகமாக வந்து இராமலிங்க அடிகளாரின் முன் படமெடுத்து ஆடியுள்ளது. அதைப் பார்த்த அன்பர்கள் அனைவரும் அது இராமலிங்க அடிகளாரைத் தீண்ட வருகிறது என்று எண்ணி அதைத் தாக்க முயற்ச்சித்துள்ளார்கள் ஆனால் இராமலிங்க அடிகளார் அவர்களைப் பார்த்து அது என்னைத் தீண்ட வரவில்லை அது முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்டு ஆன்மப் பூரணச் சுகம் அடைய வந்துள்ளது என்று கூறியுள்ளார். அந்தச் சர்ப்பம் இராமலிங்க அடிகளாரின் திருவடியை மூன்று முறை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு நடந்த இடத்தில்தான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் சென்னை தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையத்திலிருந்து வியாசர்பாடி செல்லும் வழியில், பேசின் பிரிட்ஜிலிருந்து இறங்கும் சாலையில், மேம்பாலத்திற்குக் கீழே இடதுபுறம் செல்லும் சர்வீஸ் சாலையிலேயே அமைந்திருக்கின்றது.

காணொளி: https://youtu.be/niM9opOHSdU

No comments:

Post a Comment