Friday, August 25, 2023

தூய லூர்து அன்னை திருத்தலம், பெரம்பூர், சென்னை வரலாறு - டாக்டர் எச்.கார்த்திபன்

 சென்னை தினம் - சென்னைக்கு வயது 384

சென்னை, பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ளது "தூய லூர்து அன்னை திருத்தலம்" (Our Lady of Lourdes Shrines). தமிழகத்தில் வேறெங்கும் காணப்படாத வகையில், கீழ்த்தளம், மேல்தளம் என இரண்டடுக்கு கொண்ட ஆலயமாக இது கட்டப்பட்டுள்ளது. பெரம்பூர் பகுதி ஒரு காலத்தில் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் அடையாளமாக இருந்தது. இன்றும் இச்சமுகத்தைச் சேர்ந்தவர்கள் இத்திருத்தலத்தில் பெருமளவில் கூடுகிறார்கள்.

1800-களில், சென்னை வேப்பேரி புனித அந்திரேயா ஆலயப் பங்கின் ஒரு பகுதியாக, பெரம்பூர் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த ஆலயத்தின் பங்குத்தந்தை ஹென்னசே, 1879-ஆம் ஆண்டு பெரம்பூரில், 'லூர்து அன்னை' பெயரில் சிற்றாலயம் ஒன்றைக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தார். 1880-ல் சிற்றாலயம் புனிதம் செய்யப்பட்டதை அடுத்து, வேப்பேரி பங்கின் கிளைப்பங்காக பெரம்பூர் மாறியது. பெரம்பூரில் கிறிஸ்தவ மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், 'லூர்து அன்னை ஆலயம்', 1903-ஆம் ஆண்டு தனிப்பங்காக உருவெடுத்தது.

#Chennai_384 #Chennai_day #Madras_Day#Madrasday2023#MadrasDay#celebrate_chennai_day#ChennaiDay#chennai#singarachennai #nammachennai#LourdesShrinePerambur #OurLadyofLourdes #PeramburHistory #SacredSanctuary #DivineHeritage#மெட்ராஸ் டே #சென்னை தினம்#சென்னை, #வடசென்னை, #சென்னை #சென்னை, #வடசென்னை, #சென்னை வரலாறு #பெரம்பூர் #தூய லூர்து அன்னை திருத்தலம்





1 comment:

  1. Your recent post was a game-changer for me. I'm thankful for the inspiration.

    ReplyDelete