Monday, April 19, 2021

இராமலிங்க சாமி கோயில் என்கிற திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை.

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1834-ஆம் ஆண்டு தன் பணிரெண்டாம் வயதில் பல மத சயத்தாரோடு சுத்த சன்மார்க்க பிரச்சாரம் வியாசர்பாடியில் செய்துவிட்டு இரவு நேரத்தில் வரும் பொழுது ஒரு பெரிய சர்ப்பம் வேகமாக வந்து இராமலிங்க அடிகளாரின் முன் படமெடுத்து ஆடியுள்ளது. அதைப் பாரத்த அன்பர்கள் அனைவரும் அது இராமலிங்க அடிகளாரை தீண்ட வருகிறது என்று என்னி அதை தாக்க முயற்ச்சித்துள்ளார்கள் ஆனால் இராமலிங்க அடிகளார் அவர்களைப் பார்த்து அது என்னைத் தீண்ட வரவில்லை அது முன் ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக மன்னிப்பு கேட்டு ஆன்ம பூரண சுகம் அடைய வந்துள்ளது என்று கூறியுள்ளார். அந்த சர்ப்பம் இராமலிங்க அடிகளாரின் திருவடியை மூன்று முறை வலம் வந்து புண்ணியம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நடந்த இடத்திலதான் திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயில் சென்னை தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையத்திலிருந்து வியாசர்பாடி செல்லும் வழியில், பேசின் பிரிட்ஜிலிருந்து இறங்கும் சாலையில், மேம்பாலத்திற்கு கீழே இடதுபுறம் செல்லும் சர்வீஸ் சாலையிலேயே அமைந்திருக்கின்றது.

#சென்னை, #வடசென்னை, #சென்னை வரலாறு #வியாசர்பாடி, #இராமலிங்க சாமி கோயில், #வள்ளலார், #இராமலிங்க சுவாமிகள், #சன்மார்க்கம், #சர்ப்பம், #பாம்பு


Thanks and Courtesy: Books and Online Resources

No comments:

Post a Comment